அமெரிக்க ஜனாதிபதியை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பித்தது நீதிமன்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமெரிக்க ஜனாதிபதியை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பித்தது நீதிமன்றம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கைது செய்வதற்கான பிடியாணை  பிறப்பித்து ஈராக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஈரானின் புரட்சிப் படைத்தளபதி காசிம் சோலெய்மனியை ஆள் இல்லா விமானம் மூலம் அமெரிக்க இராணுவம் ரொக்கெட் தாக்குதல் நடத்தி கொலை செய்தமை தொடர்பான வழக்கிலேயே நேற்று (07) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

$ads={2}

தளபதி காசிம் சோலெய்மனி, அவரின் மருமகன் முகந்திஸ் உள்ளிட்ட ஒன்பது பேர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மூன்றாம் திகதி ஈராக்கின் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், அமெரிக்கர்களைக் கொல்வதற்கு சோலெய்மனி திட்டமிட்டதால் அவரைக் கொன்றோம் என ஒற்றை வார்த்தையில் அமெரிக்க அரசு விளக்கம் அளித்திருந்து.

இதையடுத்து, அமெரிக்க அரசின் கட்டவிழ்த்துவிட்ட தீவிரவாதத்தால்தான் சோலெய்மனி கொல்லப்பட்டார் எனவும் அதற்குப் பழி தீர்ப்போம் என்றும் ஈரான் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஈராக்கில் உள்ள பாக்தாத் விசாரணை நீதிமன்றம், இராணுவத் தளபதி காசிம் சோலெய்மனி, அபு மஹ்தி அல் முகந்திஸ் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வருகிறது.

கடந்த வாரம் முகந்திஸ் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய நீதிமன்றம், அவர்களிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்தது.

இந்நிலையில், காசிம் சோலெய்மனி, முகந்திஸ் இருவரையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான இராணுவம் திட்டமிட்டுக் கொலை செய்துள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

$ads={2}

இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேறவுள்ள ட்ரம்ப்பைக் கைதுசெய்ய பக்தாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் ட்ரம்ப் மீதான கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.