ஆஸ்திரேலியா சிட்னியில் இந்திய கிரிக்கட் வீரர்களான சிராஜ் மற்றும் பும்ராவை இன ரீதியாக இழிவுபடுத்தியவர்கள் மீது புகார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆஸ்திரேலியா சிட்னியில் இந்திய கிரிக்கட் வீரர்களான சிராஜ் மற்றும் பும்ராவை இன ரீதியாக இழிவுபடுத்தியவர்கள் மீது புகார்!

சிட்னி டெஸ்டில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பும்ரா, சிராஜை இன ரீதியாக இழிவுபடுத்திய ரசிகர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.

டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் டிம் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.


$ads={2}


ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்தது. இந்திய அணி இன்று மிகவும் சுமாராக விளையாடி, 100.4 ஓவர்கள் விளையாடி, 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 3-ம் நாள் முடிவில் 197 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில் 2-வது மற்றும் 3-வது நாள்களில் சிட்னி மைதானத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, சிராஜ் ஆகிய இருவரையும் இன ரீதியாக ரசிகர்கள் சிலர் இழிவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து 3-ம் நாள் ஆட்டம் முடிவடைந்த பிறகு இந்திய அணி கேப்டன் ரஹானே, அஸ்வின் ஆகிய இருவரும் கள நடுவர்கள் பால் ரீஃபில், பால் வில்சன் ஆகியோரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்கள். மைதானத்தின் பாதுகாவல் அதிகாரிகளிடமும் முறையிடப்பட்டுள்ளது. 

இதையடுத்து இந்திய வீரர்களை இழிவுபடுத்திய ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.