மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜாகி உர் ரஹ்மானுக்கு 15 ஆண்டுகள் சிறை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜாகி உர் ரஹ்மானுக்கு 15 ஆண்டுகள் சிறை!!


மும்பை தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஜாகிஉர் ரஹ்மானுக்கு பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது,


கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கடல் வழியே மும்பை நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதனால் மும்பை நகரமே போர்க்களமானது. இத்தாக்குதலில் பல காவலர்கள் உட்பட 166 பேர் உயிரிழந்தனர்.


$ads={2}


இத்தாக்குதலில் ஈடுபட்ட 09 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் கடந்த 2012ஆம் ஆண்டு புனேவில் அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார்.


இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைமை இராணுவ தளபதி ஜாகி உர் ரகுமான் லக்வி. மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் இவர் முன்னரே கைது செய்யப்பட்டிருந்தாலும், கடந்த 2015ஆம் ஆண்டிலேயே இந்த வழக்கில் அவர் பிணை பெற்றார்.


இந்நிலையில், பல்வேறு நாடுகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்குத் தொடர்ந்து நிதியுதவி செய்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஜாகி உர் ரகுமான் பாகிஸ்தானில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கும் அந்நாட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.


$ads={2}


இவ்வழக்கில் 61 வயதாகும் ஜாகி உர் ரகுமான் லக்விக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவருக்குப் பாகிஸ்தான் ரூபாய் 30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் கூடுதலாக 1.5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.