முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்! அசாத் சாலி சவால்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்! அசாத் சாலி சவால்!

azath salley

முடியுமென்றால் தம்மை கைது செய்யுமாறு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி சவால் விடுத்துள்ளார்.


கொழும்பில் நேற்றைய தினம் (07) நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


$ads={2}


அசாத் சாலி போன்றவர்கள் ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர்களை கைது செய்யாமை பொலிஸாரின் குறைபாடாகும் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார்.


இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அசாத் சாலி நேற்றைய தினம் இந்த சவாலை விடுத்துள்ளார்.


“என்னை கைது செய்யுமாறு விமல் கோருகின்றார். மரணத்தை வைத்து அரசியல் செய்கின்றார்கள், முடிந்தால் என்னை கைது செய்யுமாறு விமல் வீரவன்சவிற்கு நான் சவால் விடுகின்றேன்” என அசாத் சாலி கூறியுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.