இலங்கையில் தேங்காய் தட்டுப்பாடு - குளிரூட்டப்பட்ட தேங்காய் இறக்குமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் தேங்காய் தட்டுப்பாடு - குளிரூட்டப்பட்ட தேங்காய் இறக்குமதி!

இவ்வாரம் முதல் வெளிநாடுகளிலிருந்து குளிரூட்டப்பட்ட தேங்காய்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாட்டில் தேங்காய்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பி.எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இவ்வாறு தேங்காய்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.


$ads={2}

நாட்டில் கடந்த வருடம் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தேங்காய்களின் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளமையினால் தற்போது நாட்டில் தேங்காய்களுக்கான தட்டுப்பாடு நிலவிவருகின்றது.

அதன்காரணமாக நாட்டில் தேங்காய்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையிலும், விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் வகையிலும் தேங்காய்களை இறக்குமதி செய்யவுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பி.எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.