சிங்கள மொழியில் வழங்கப்பட்ட சான்றிதல் - அதனை ஏற்க மறுத்த தமிழ் இளைஞர்கள்! - இறுதியில் அமைதியின்மை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிங்கள மொழியில் வழங்கப்பட்ட சான்றிதல் - அதனை ஏற்க மறுத்த தமிழ் இளைஞர்கள்! - இறுதியில் அமைதியின்மை!

கிளிநொச்சியில் சிங்கள மொழியில் எழுதப்பட்ட வெற்றிச்சான்றிதழை ஏற்க இளைஞர்கள் மறுத்துள்ளனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மற்றத்தினால் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்தோட்ட போட்டியில் வெற்றியீட்டிய இளைஞர்களை கௌரவிக்கம் நிகழ்வில் குறித்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வின் நிறைவில், சான்றிதழ்கள் தனி சிங்கள மொழியில் காணப்பட்டமை தொடர்பில் இளைஞர்கள் அதிருப்தி வெளியிட்டனர்.

இதன் காரணமாக குறித்த நிகழ்வின் இறுதியில் அமைதியின்மையும் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


$ads={2}

இவ்விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் மன்ற உதவி பணிப்பாளர் தபேந்திரன் குறிப்பிடுகையில், “குறித்த சான்றிதழானது அவசரமாக இளைஞர்களுக்கு வழங்குவதற்காக நேற்று வரவழைக்கப்பட்டது.

குறித்த சான்றிதழானது இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கியமானவர்களின் ஒப்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 காலப்பகுதியில் சிங்கள மொழி எழுதுவினைஞர்கள் மாத்திரமே கடமையில் இருந்தனர். தமிழ் ஊழியர்களை அழைக்க முடியாது போனமையாலே இவ்வாறான சிக்கல் ஏற்பட்டது” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக மாகாண உதவி பணிப்பாளர் மற்றும் மாவட்ட உதவி பணிப்பாளர்களின் கையொப்பத்துடன் அவர்களுக்கு தேவையான மொழியில் சான்றிதழ்களை வழங்குமாறு தலைமை காரியாலயத்திலிருந்து அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.