ஈஸ்டர் தாக்குதல்; ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதல்; ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவு!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிகளை விசாரிக்கும் காலம் நேற்றுடன் (19) நிறைவடைந்தது.

$ads={2}

இதன்படி, ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.

2019 ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டின் பல கிரிஸ்தவ தேவாலயங்களில் பயங்கரவாத குழுக்கலினால் திட்டமிடப்பட்ட தாக்குமல்கள் முன்னெடுக்கப்டடன.

இதனைத் தொடர்ந்து, இந்த தாக்குதலை தவிர்ப்தற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமைக்குறித்து பலத்தரப்பிடமும் இருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தின் பின்னணி மற்றும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளின் தவறுகள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.