ட்ரம்ப்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் முடக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ட்ரம்ப்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் முடக்கம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

$ads={2}

காலவரையறையின்றியும் அவர் பேஸ்புக் கணக்கு இடைநிறுத்தப்படும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையின்படி எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி ஜோ பைடனுக்கு அதிகாரம் மாற்றப்படும் வரை ஜனாதிபதியால் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவுகளை மேற்கொள்ளமுடியாது.

அவரது ஆதரவாளர்கள் அமெரிக்க கெப்பிட்டல் கட்டிடத்தை நேற்று தாக்கிய பின்னர் இந்த இரண்டு சமூக தளங்களும் அவருக்கு 24 மணி நேர தடையை விதித்தன.

ட்ரம்பை பதிவிட அனுமதிப்பதால் ஏற்படும் அபாயங்கள் பாரியவை என்று மிகப் பேஸ்புக்கின் தலைவர் மார்க் ஸூக்கர்பெர்க் தெரிவித்திருந்தார்.

முன்னதாக கெப்பிட்டொல் கட்டிடத்தை தமது ஆதரவாளர்கள் தாக்கிய போது, அவர்களுக்கு தமது பேஸ்புக்கின் ஊடாக ஜனாதிபதி ட்ரம்ப் தமது அன்பை வெளிப்படுத்துவதாக பதிவு ஒன்றை செய்திருந்தார்.

$ads={2}

அத்துடன் தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக மீண்டும் குற்றம் சுமத்தியிருந்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.