அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள விசேட எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள விசேட எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டாலும் சுகாதார நடைமுறைகள் தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ள நிலையில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமந்த ஆனந்த இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி நாட்டிற்கு கொண்டுவரப்படுவதினால் எதிர்வரும் காலங்களில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விடயத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும் சாத்தியம் காணப்படுகின்றது.

எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகள் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும். தடுப்பூசி இறக்குமதி செய்யப்படுவதனை கருத்திற் கொண்டு தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகள் இலகுபடுத்தபபடமாட்டாது.

நாட்டு மக்களில் சுமார் 70 சத வீதமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கினால் மாத்திரமே கொரோனா தொற்ற ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்.

எனவே அவ்வாறானதொரு இலக்கை அடைவதற்கு பாரிய கால அவகாசம் தேவைப்படும். எனவே பொதுமக்கள் சுகாதார விதமுறைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.