தினமும் வீட்டுக்கு வரும் 5 ஆயிரம் கிளிகள்! வருமானத்தில் 50 சதவிகிதம் கிளிகளுக்கு செலவிடும் தம்பதியினர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தினமும் வீட்டுக்கு வரும் 5 ஆயிரம் கிளிகள்! வருமானத்தில் 50 சதவிகிதம் கிளிகளுக்கு செலவிடும் தம்பதியினர்!


தமிழ் நாட்டில் இப்போதெல்லாம் கிராமப் பகுதியிலேயே பறவைகள், கிளிகளைப் பார்ப்பது அரிதாகி வருகிறது. ஆனால் இப்படியான சூழலில் வாகன நெரிசல் மிகுந்த சென்னையில் ஒருவீட்டுக்கு தினமும் 5 ஆயிரம் கிளிகள் வருகிறது என்றால் ஆச்சரியம் ஆனதுதானே?


வளர்ச்சி என்னும் பெயரில் வெட்டி வீழ்த்தப்படும் மரங்கள், எங்கு திரும்பினாலும் உயர்ந்து நிற்கும் காங்கிரீட் கட்டிடங்கள் ஆகியவற்றால் இப்போது புறநகர்ப்பகுதிகளிலேயே பறவைகளைக் காணமுடியவில்லை. இப்படியான சூழலில் சென்னை சிட்டிக்குள் இருக்கிறது சிந்தாகிரிப்பேட்டை எனும் பகுதி. இங்குள்ள சுதர்சன் சாஹ்_வித்யா தம்பதியினரின் வீட்டுக்கு தினமும் 5 ஆயிரம் கிளிகள் வரை உணவு சாப்பிட வருகின்றன. அதிலும் மாலை 4.00 மணியானால் மறக்காமல் ஆஜர் வைத்துவிடுகின்றன. அந்த தம்பதியினரும் துளியும் சலிக்காமல் அரிசி, கடலை உள்ளிட்ட உணவுகளை வைக்கின்றனர்.


சுதர்சன் சாஹ் எலக்ட்ரிகல் கடை வைத்திருக்கிறார். தன் மாதாந்திர வருமானத்தில் 50 சதவிகிதத்தை கிளிகள், சாலையில் திரியும் பிராணிகளுக்கு உணவிட இவர் செலவு செய்கிறார். மரங்களை வீட்டுக்கு ஒன்று என்ற அளவிலேனும் வளர்க்க வேண்டும். அப்போதுதான் கிளிகளுக்கு வசிக்கவேனும் இடம் கிடைக்கும். நாம் நம் வீட்டு மொட்டைமாடியில் தினமும் கொஞ்சம் அரிசியை போட்டாலே பறவைகள் வரத் துவங்கிவிடும். இது நாம் வாயில்லாப் பிராணிகளுக்குச் செய்யும் பெரிய சேவை.’’ என மனம் நெகிழ்வுடன் சொல்கிறார்கள் சுதர்சன்_வித்யா தம்பதியினர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.