மேல் மாகாண பாடசாலைகளின் மாணவ ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் பரிந்துரை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேல் மாகாண பாடசாலைகளின் மாணவ ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் பரிந்துரை!


மேல் மாகாண பாடசாலைகளுக்கு செல்லவேண்டியுள்ள வெளிமாகாணத்தின் மாணவர்கள் ஆசிரியர்கள் தமக்கு அருகிலுள்ள பாடசாலை ஒன்றிற்கு செல்லுமாறு கல்வி அமைச்சு பரிந்துரைத்துள்ளது. 


மேல் மாகாணப் பாடசாலைகளில் தரம் 11க்கான வகுப்புகள் கடந்த 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானத்தை கல்வி அமைச்சு எடுத்துள்ளது. 


வெளி மாகாணங்களில் இருந்து மேல் மாகாணப் பாடசாலைகளுக்கு வந்து செல்வதற்கான சுகாதார அனுமதி இன்னமும் வழங்கப்படாமையினால், வெளிமாகாண ஆசிரியர்களோ, மாணவர்களோ மேல் மாகாணத்திற்கு வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. 


எனவே, மேல் மாகாணத்திற்கு வெளியே தமக்கு அருகில் உள்ள பாடசாலைக்கோ, அல்லது மேல் மாகாணத்திற்குள் வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியர்கள் தமக்கு அருகில் உள்ள பாடசாலைக்கோ செல்ல முடியும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. 


இது தற்போது வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள தரம் 11 ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.