பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட கொரோனா தொற்றாளருக்கு வழங்கப்பட்ட கேக் துண்டினை உண்ட பலர் - காலியில் சம்பவம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட கொரோனா தொற்றாளருக்கு வழங்கப்பட்ட கேக் துண்டினை உண்ட பலர் - காலியில் சம்பவம்

கொரோனா தொற்றுக்கு இலக்கான காலி சிறைச்சாலையில் சிறைக் காவலர் ஒருவர், தனது வீட்டில் பிறந்தநாள் விழாவை நடத்தியதாகவும், அண்டை வீட்டில் இடம்பெற்ற விழாவில் கலந்து கொண்டதாகவும் காலி மாவட்ட பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் வெனுர கே. சிங்காரச்சி தெரிவித்தார்.

$ads={2}

குறித்த நபர் மகனின் பிறந்த நாளைக் கொண்டாடவே இந்த பிறந்தநாள் விழாவினை ஏற்பாடு செய்திருந்தார். மேலும் மகன் கொரோனா தொற்றுக்கு இலக்கான தந்தைக்கு கேக் ஊட்டியதாகவும், அதே கேக் துண்டினை மேலும் 16 பேருக்கு வழங்கப்பட்டதாகவும் பிரதேச சுகாதார அதிகாரி தெரிவித்தார். 

 பக்கத்து வீட்டில் நடைபெற்ற விழாவில் 41 முதியோர்கள் கலந்து கொண்டது தெரிய வந்துள்ளது.

மேலும், ஜனவாரி 01 முதலாம் திகதி விஹாரையிலுள்ள தேரர்களுக்கும் குறித்த தொற்றாளர் தானம் வழங்கியுள்ளார். 

மேலும் 41 முதியோர்கள், தேரர்கள் அவருடன் நெருங்கிப்பழகிய அனைவருக்கும் பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.