இலங்கையில் மேலும் 04 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர். அதன்படி இலங்கையில் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 287 ஆக அதிகரித்துள்ளது.
பேருவளை பகுதியை சேர்ந்த 49 வயது பெண்ணொருவரும், தெரணியகள பகுதியை சேர்ந்த 43 வயது பெண்ணொருவரும், வரகாகொட பகுதியை சேர்ந்த 76 வயது ஆணொருவரும், கொழும்பு 08ஐ சேர்ந்த 71 வயது ஆணொருவருமே இவ்வாரு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரம் இன்றைய தினம் நாட்டில் கொரோனா தொற்றினால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 737 ஆக பதிவாகியது.