பிக்பாஸில் 03ஆவது பாகத்தில் கலந்து கொண்ட பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிக்பாஸில் 03ஆவது பாகத்தில் கலந்து கொண்ட பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை!!


பிரபல பிக்பாஸ் நடிகை தற்கொலை செய்து கொண்ட தகவல் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னட மொழியில் பிக்பாஸ் 03ஆவது பாகத்தின் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை ஜெயஸ்ரீ ராமையா அவர்களே இவ்வாறு தற்கொலை செய்திகொண்டுள்ளார்.


அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் பெங்களூரு சந்தியா கிரானா ஆஷ்ரமத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்ததாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடையும் போட்டியாளர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் அமைவது வழக்கம். ஆனால் நடிகை ஜெயஸ்ரீக்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காததால் மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார். 


முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் தற்கொலை குறித்து ஜெயஸ்ரீ ராமையா வெளியிட்டிருந்த பதிவைப் பார்த்த கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் அவரை தேற்றினார். பின்பும் குடும்பத்திலிருந்து விலகி அவர் ஆசிரமம் ஒன்றில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.



இந்நிலையில் குடும்பத்தினர் தொடர்பு கொண்ட போது அழைப்பினை ஏற்காததால் சந்தேகத்தில் ஆசிரமத்திற்கு தொடர்பு கொண்டுள்ளனர்.


இதையடுத்து ஜெயஸ்ரீ ராமையா தூக்கிட்டு தற்கொலை கொண்டிருப்பதை ஆசிரம நிர்வாகிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.