வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்த ஆண்டு நீக்க வாய்ப்பில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் சம்பத் மெரஞ்சீகே, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் கலந்துரையாடலின் போது இந்த முடிவு தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் 2020 ஆம் ஆண்டில் அரசாங்கம் வாகன இறக்குமதிக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.