நாட்டில் கொரோனா தொற்றின் அச்சநிலை; உயிரிழப்பும் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் கொரோனா தொற்றின் அச்சநிலை; உயிரிழப்பும் அதிகரிப்பு!


நாட்டில் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளது.


நேற்றைய தினம் 873 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்ட நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


$ads={2}


பேலியகொடை கொரோனா கொத்தணியுடன தொடர்புடைய 866 பேரும், கைதிகள் 07 பேரும் இவ்வாறு நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


மேலும், நாட்டில் அன்மைய நாட்களில் ஒரேநாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநாளாக நேற்றைய நாள் பதிவாகியுள்ளது.


இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின்  மொத்த எண்ணிக்கை 56,062 ஆக அதிகரித்துள்ளது,


மேலும் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 276 ஆக அதிகரித்துள்ளது.


பேலியகொடை பகுதியைச் சேர்ந்த 71 வயதான பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.


கடுமையான நியூமோனியாவினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது,


மேலும், அத்துருகிரிய பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஆணொருவர் கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.


ஹோமாகம  வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில், அவருக்கு கொரோனா நியுமோனியா அதிகரித்ததில் உயிரிழப்பு சம்பவித்துள்ளது.


இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 769 பேர் குணமடைந்த நிலையில் நேற்று  வீடு திரும்பியுள்ளனர்.


இதன்படி கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47,984 ஆக உயர்வடைந்துள்ளது.


இந்நிலையில் நாட்டின் 66 சிகிச்சை நிலையங்களில் 7,804 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அத்துடன், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 792 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.