தம்மிக்க பாணியை பருகுமாறு மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தம்மிக்க பாணியை பருகுமாறு மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாற்றம்!

விமான நிலைய பணிக்குழாமினருக்காக கொரொனா தடுப்பதாக கூறப்படும் தம்மிக்க பாணியை கொள்வனவு செய்யுமாறு அறிவித்து மின்னஞ்சல் ஊடாக தகவல் பரிமாறப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

$ads={2}

நேற்றைய (19) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இவ்வாறான எந்தவொரு தீர்மானமும் விமான நிலையம் அல்லது விமான சேவைகள் நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படவில்லை என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் வழிநடத்தல் பணிப்பாளர் சேஹான் சுமனசேகர எமது செய்தி பிரிவிற்கு உறுதிப்படுத்தினார்.

கொரொனா தடுப்பதாக கூறப்படும் கேகாலை தம்மிக்க பண்டாரவால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பாணி தொடர்பிலான ஆய்வு கூட பரிசோதனை ஆரம்பித்து நேற்றுடன் 10 நாட்கள் நிறைவடைகின்றன.

எனினும் அந்த பாணியை அருந்தியவர்களுக்கு கொரொனா தொற்றுறுதியாகியுள்ளமை தொடர்பில் ஹிரு செய்தி சேவை, சுதேச சிகிச்சை ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகரவிடம் வினவியது.

இதற்கு பதில் வழங்கிய அவர், ஆய்வு கூட பரிசோதனையில் உறுதிப்படுத்துவதற்கு முன்னர் குறித்த பாணியை கொரோனா தடுப்பு ஒளடதமாக பயன்படுத்த முடியும் என தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம் - ஜப்னா முஸ்லிம்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.