புனித குர்ஆன் தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பில கூறியவை தவறு - ACJU

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புனித குர்ஆன் தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பில கூறியவை தவறு - ACJU

புனித குர்ஆன் தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பில பொதுமக்களை தவறாக வழிநடத்தியதாக அனைத்து இலங்கை ஜம்மியத்துல் உலமா குற்றம் சாட்டியுள்ளது.

கம்மன்பிலவுக்கு எழுதிய கடிதத்தில், கடந்த தினம் ஒன்றில் நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை, ஏமாற்றத்தையும், கவலையையும் வெளிப்படுத்தியுள்ளதாக ஜம்மியத்துல் உலமா குறிப்பிட்டுள்ளது.

ஒரு சட்டத்தரணி மற்றும் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்ற வகையில் 2021 ஜனவரி 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அவர் கூறிய கருத்து தவறானது.

ஒருவரின் ஜனாஸாவுக்கான அடக்கம் குர்ஆனில் கட்டாயப்படுத்தப்படவில்லை என்ற கம்மமன்பிலவின் அனுமானம் தவறானது.

புனித குர்ஆன், இது ஒரு தெய்வீக வெளிப்பாடாகும், இது மனிதகுலத்திற்கு வழிகாட்டுதலின் ஒரு ஆதாரமாகும், மேலும் இது உலகளாவிய முறையில் இயற்றப்பட்டுள்ளது,


$ads={2}

இது விஷயங்களை கருத்தியல் ரீதியாகவும், உலகின் எந்தப் பகுதியிலும் வாழும் எந்தவொரு மனிதனுக்கும் ஏற்றவகையிலும் கூறுகிறது.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றான ஐந்து வேளை தொழுதல் என்ற விடயம் குர்ஆனில் விரிவாக விவரிக்கப்படவில்லை.

ஆழமான விளக்கம் இல்லாததால், இந்த கட்டாய தொழுகை முஸ்லிம்களுக்கு அவசியமில்லை என்று கருதுவது தவறானது என்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சுட்டிக்காட்டியுள்ளது.

இதேபோல், இஸ்லாமிய ரமழான் மாதத்தில் நோன்பு ஜகாத் (கடமை தொண்டு) மற்றும் ஹஜ் யாத்திரை போன்ற பிற அடிப்படைக் கொள்கைகளைப் பொறுத்தவரையில், அந்தந்த நிபந்தனைகள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குர்ஆனில் வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை.

புனித குர்ஆனில் இவை குறிப்பாக விவரிக்கப்படவில்லை என்பதால், ஒரு முஸ்லிம் இந்த கடமைகளை கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதுவது மிகவும் பொருத்தமற்றது என்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தெரிவித்துள்ளது.

எனவே இந்த விடயத்தில் இனங்களுக்கு இடையில் புரிதல்களை இல்லாமல் செய்யும் செயற்பாடுகளை கைவிடுமாறு அகில இலங்கை ஜம்மியல்துல் உலமா உதய கம்மன்பிலவிடம் கோரியுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.