டொனல்ட் ட்ரம்ப் அதிரடி - 8 செயலிகளுக்கு தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டொனல்ட் ட்ரம்ப் அதிரடி - 8 செயலிகளுக்கு தடை!

இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி டிக் டாக் உள்பட 100-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு இந்தியா கடந்த ஆண்டு தடை விதித்தது.
இதனை பின்பற்றி அமெரிக்காவும் தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி டிக் டாக் மற்றும் வீ சாட் ஆகிய சீன செயல்களுக்கு தடை விதித்தது.

இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த மேலும் 8 சீன செயலிகளுக்கு தடை விதித்து ஜனாதிபதி டிரம்ப் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.


$ads={2}

இந்த செயலிகள் அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி சீன அரசுக்கு வழங்குவதாக அந்த தடை உத்தரவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.‌

இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-

நமது நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதுகாக்க வேண்டுமெனில் சீன தொடர்புடைய மென்பொருள் செயலிகளை உருவாக்குபவர்கள் அல்லது கட்டுப்படுத்துபவர்களுக்கு எதிராக நாம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, அலிபே, கேம்ஸ்கேனர், கியூ கியூ வாலட், ஷேர் இட், டென்சென்ட் கியூ கியூ, விமேட், வீ சாட் பே மற்றும் டபிள்யூ.பி.எஸ் அலுவலகம் ஆகிய 8 சீன செயலிகளுக்கு தடை விதிக்கபபடுகிறது. இத்தடை உத்தரவு அடுத்த 45 நாட்களில் நடைமுறைக்கு வரும்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.