VIDEO: கொரோனா மரணங்களை தொடர்ந்து தகனம் செய்வோம்! பாராளுமன்றத்தில் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: கொரோனா மரணங்களை தொடர்ந்து தகனம் செய்வோம்! பாராளுமன்றத்தில் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி!

கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது குறித்து பரிசீலிக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி உயிரிழக்கும் சடலங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து தகனம் செய்வதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மத, அரசியல், அல்லது பிற காரணங்களுக்காக இந்த முடிவு திரும்பப் பெறப்படாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.


$ads={2}


கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் அறிக்கையொன்றினை நிபுணர் குழு சமீபத்தில் ஒப்படைத்தமை குறித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியபோது, ​​அந்த அறிக்கையானது பிரதான குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது, தற்போது அது குறித்தான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

வைத்தியர் சன்னா பெரேரா தலைமையிலான குழுவே இதனை தீர்மானிக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.