26 வயது குடும்பஸ்தர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை; புத்தளத்தில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

26 வயது குடும்பஸ்தர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை; புத்தளத்தில் சம்பவம்!


புத்தளம் - தில்லையடி, ரத்மல்யாய பகுதியில் ஒருவர் தனக்குத் தானே தீ வைத்து உயிரை மாய்த்துள்ளார்.


குறித்த சம்பவம் இன்று (20) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக புத்தளம், கற்பிட்டி மாவட்டத்திற்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம். ஹிஸாம் தெரிவித்தார்.


$ads={2}

புத்தளம் தம்பபன்னி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


குறித்த நபர் போதைக்கு அடிமையாகி, மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு PCR பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படுமென திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.


இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.