தனது மனைவியை நாட்டுக்கு அழைத்துவருமாறு கோரி 24 வயது நபரொருவர் தொலைபேசி கோபுரத்தில் ஏறி போராட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனது மனைவியை நாட்டுக்கு அழைத்துவருமாறு கோரி 24 வயது நபரொருவர் தொலைபேசி கோபுரத்தில் ஏறி போராட்டம்!


வெளிநாட்டில் பணியாற்றும் தனது மனைவியை நாட்டுக்கு அழைத்துவர உதவி செய்யுமாறு கோரி கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் 216 அடி உயரமான தொலைபேசி கோபுரத்தில் ஏறி நின்று 24 வயதான நபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.


இவரது இந்த போராட்டம் நேற்று (16) முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமானது. நீர்கொழும்பு பிடிப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு போராட்டத்தில் குதித்தவராவார்.


$ads={2}


பல வருடங்களுக்கு முன்னர் தனது மனைவி ஜோர்தானுக்கு தொழிலுக்காகச் சென்றதாகவும். கடந்த 9 மாத காலமாக அவர் அங்கு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


இது தொடர்பாக அனைத்து விபரங்களும் அடங்கிய ஆவணங்களை வெளிநாட்டு அமைச்சுக்கு வழங்கியதாகவும் அமைச்சு இது தொடர்பாக நடவடிக்கை எடுத்தபோதும் அமைச்சில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தனது மனைவியை நாட்டுக்கு அழைத்த வருவதற்காக தம்மிடம் 4 இலட்சம் ரூபா கோரியதாகவும் அந்த நபர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.


தன்னிடம் அந்தத் தொகை இல்லாததன் காரணமாக சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்தபோது வெளிநாட்டு அமைச்சின் அதிகாரி 4 இலட்சம் ரூபா பணம் கோரியமை தொடர்பாக ஒலிப்பதிவு இருக்குமாயின் அதனை தன்னிடம் வழங்குமாறு அமைச்சர் கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற கம்பஹா பொலிஸார் அவருடன் உரையாடியதனையடுத்து இன்று (17) காலை10.30 மணியளவில் சுற்றுலாத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் தொலைபேசி கோபுரத்திலிருந்து கீழே இறங்கினார்.


ஜோர்தானில் முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள அந்த நபரின் மனைவியை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்ற வாக்குறுதியை அதிகாரிகள் வழங்கியதன் பின்னர் அந்த நபர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.


அந்த நபரின் மனைவி விசா இன்றி ஜோர்தானில் தங்கியிருந்ததன் காரணமாக அங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சில மாதம் சிறை வைக்கப்பட்டதன் பின்னர் தற்போது அங்கு முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.


-மெட்ரோ நியூஸ்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.