மூன்று வயது குழந்தை துஷ்பிரயோகம்; 14 வயது சிறுவன் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மூன்று வயது குழந்தை துஷ்பிரயோகம்; 14 வயது சிறுவன் கைது!


மூன்று வயது குழந்தையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதன் பேரில் 14 வயது சிறுவனொருவன் மினுவாங்கொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவர் இப்பிள்ளையின் உறவினரென்பது தற்போது தொியவந்துள்ளது.


மேற்படி சிறுவன் நேற்றைய தினம் (24) கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.


குறித்த சிறுமியின் தாய் மற்றும் தந்தை தொழில் நிமித்தம் வெளியில் செல்வதால் பாட்டியின் பாதுகாப்பிலேயே இருந்துள்ளார். 


விளையாடிவிட்டு வருவதாகக் கூறி குறித்த சிறுமியை சந்தேக நபரான சிறுவன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இச்சந்தர்ப்பத்திலேயே சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தொிவிக்கின்றனர்.


மேற்படி சிறுமி கம்பஹா மாவட்ட தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட சிறுவன் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.