கொரோனா கைதிகளின் உணவு பொதியில் 10 ஆயிரம் ரூபா பணம் மற்றும் லைட்டர்கள்! அதிகாரி இடைநிறுத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா கைதிகளின் உணவு பொதியில் 10 ஆயிரம் ரூபா பணம் மற்றும் லைட்டர்கள்! அதிகாரி இடைநிறுத்தம்!


கந்தக்காடு கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவரும் கைதி ஓருவருக்கு வழங்கும் நோக்கில், சட்டவிரோதமாக பொதி ஒன்றை பெற்று வைத்திருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்றுவரும் கைதி ஒருவருக்கு வழங்குமாறு கொடுக்கப்பட்ட உணவுப் பொதி ஒன்றை , அங்கு சேவையில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் பெற்றுக் கொண்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.


இதன்போது, சம்பந்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரியின் அறை சோதனை செய்யப்பட்டு அங்கிருந்து பொதி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அந்த பொதியில் உணவு , 10,000 ரூபா பணம் மற்றும் புகைத்தலுக்காக பயன்படுத்தப்படும் லைட்டர்கள் இரண்டும் மீட்கப்பட்டன.


இதுத் தொடர்பில் ஆரம்பக் கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் ,இந்த விவகாரம் தொடர்பில் குறித்த சிறைச்சாலை அதிகாரியின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்


-செ.தேன்மொழி


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.