கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) கொழும்பின் ஆறு மருத்துவமனைகளில் இடம்பெறவுள்ளன.
பொதுசுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை, ஹோமாஹம ஆதார வைத்தியசாலை, முல்லேரியா வைத்தியசாலை மற்றும் தொற்றுநோய் வைத்தியசாலை ஆகியவற்றில் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்தவாரம் ஏனைய வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.