கொரோனா தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளுக்கு தொடரும்!! -லாரன்ஸ் வொங்ச்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளுக்கு தொடரும்!! -லாரன்ஸ் வொங்ச்


கொரோனாவின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என்று சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

உலகில் கொரோனா முடிவுக்கு வர இன்னும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று சிங்கப்பூர் கல்வி அமைச்சர் லாரன்ஸ் வொங்ச் எச்சரித்துள்ளார்.

பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கொரோனா தடுப்­பூ­சி­கள் வந்து­விட்­ட­தால் படிப்­ப­டி­யாக அனைத்துல­கப் பய­ணத்­தைத் தொடங்க முடி­யும் என்­றா­லும், உல­கம் முழு­வ­தும் தடுப்­பூசி போடு­வது அவ்­வ­ளவு விரை­வா­க­வும் எளி­தா­க­வும் நடந்­து­வி­டாது. அத­னால் இவ்­வாண்­டி­லும் ஒரு­வேளை அடுத்த ஆண்டின் குறிப்­பிட்ட காலத்­தி­லும் பெரும் மாற்­றத்­திற்­கு உள்­ளான உல­கில் வாழ்வதற்கு எம் நாட்டவர்கள் தயா­ராக இருக்க வேண்­டும்," என கொரோனா தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­ நிலை பணிக்குழு­வின் இணைத் தலை­வ­ரு­மான திரு வோங் கூறினார்.

கொள்கை ஆய்­வுக் கழ­கம் ஏற்­பாடு செய்­தி­ருந்த சிங்­கப்­பூர் கண்ணோட்ட மாநாட்­டில் கலந்­து கொண்­ட­போது அவர் இவ்­வாறு பேசி­னார்.

முகக்­க­வ­சம் அணி­வது, பாது­காப்­பான இடை­வெ­ளியை உறுதி செய்வது, கூட்­டம் அதி­க­முள்ள இடங்­க­ளைத் தவிர்ப்­பது போன்றவை அன்­றாட வாழ்க்­கை­யின் ஒரு பகு­தி­யா­கத் தொட­ரும் என்று அமைச்சர் வோங் தெரி­வித்­தார்.

தென்­னாப்­பி­ரிக்­கா­வில் தோன்­றிய உரு­மாற்­றக் கிரு­மியை எதிர்த்­துச் செயல்­படும் திறனை இப்­போ­தைய தடுப்­பூ­சி­கள் கொண்­டி­ரா­மல் போக­லாம் என்று முதற்­கட்ட ஆய்வு முடி­வு­கள் காட்­டு­வதை ஓர் இடையூ­றாக அவர் குறிப்­பிட்­டார்.

அதே நேரத்­தில், கொரோனா கிரு­மி­யின் எல்­லா­வி­த­மான திரிபுகளுக்கு எதி­ரா­க­வும் செயல்­ப­டக்­கூ­டிய ஒரு தடுப்பு மருந்து கண்டு­பி­டிக்­கப்­ப­ட­லாம் என்­றும் அவர் சொன்­னார்.

மாறாக, சளிக்­காய்ச்­சல் தடுப்­பூசி போல, குறிப்­பிட்ட கால இடைவெளி­யில் புதிய வகை தடுப்­பூ­சி­களும் உரு­வாக்­கப்­ப­ட­லாம் என்­றும் திரு வோங் கூறி­னார்.

"பகிர்ந்த உல­கில் நாம் வாழ்­கிறோம் என்­ப­தும் எல்­லா­ரும் பாதுகாப்பாக இருக்­கும் வரை எவ­ருக்­கும் பாது­காப்­பில்லை என்பதுமே இதி­லி­ருக்­கும் அடிப்­ப­டைச் செய்தி," என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

சில நேர்­ம­றை­யான மாற்­றங்­கள் தோன்­ற­லாம் என்­றா­லும், கொரோனா தொற்­றுக்­குப் பிந்­தைய உல­கம் இப்­ப­டித்­தான் இருக்­கும் என எவ­ரா­லும் கூற முடி­யாது என்­றார் அவர்.

1918 சளிக்­காய்ச்­சல் பர­வ­லுக்­குப் பின் வெற்­றி­லைப் படிக்­கம் பயன்படுத்­து­வ­தும் பொது இடங்­களில் எச்­சில் துப்­பு­வ­தும் சுகாதாரமற்ற பழக்­கங்­க­ளா­கப் பார்க்­கப்­பட்­டதை அமைச்­சர் வோங் சுட்­டி­னார்.

அது­போல, சிங்­கப்­பூ­ரி­லும் சுகா­தா­ரப் பழக்­கங்­கள் குறித்­தும் சமூகப் பொறுப்பு குறித்­தும் கொரோனா பர­வல் பெரும் விழிப்­பு­ணர்வை ஏற்ப­டுத்­தி­யுள்­ள­தா­கக் குறிப்­பிட்ட திரு வோங், கைகுலுக்கு­வது போன்ற சில பழக்கவழக்­கங்­கள் ஒழிந்தே போக­லாம் என்­றும் சொன்னார்.

ஒவ்­வொரு முறை நோய்ப் பர­வ­லின்­போ­தும் ‘தொற்று அபா­யத்­தைக் குறைக்க புது­வ­கை­யில் முக­மன் கூறு­வோம்’ என்ற குரல்­கள் எழும் என்ற அமைச்­சர், சிங்­கப்­பூ­ரில் 2003 சார்ஸ் பர­வ­லின் போதும் அது நிகழ்ந்­த­தா­கக் குறிப்­பிட்­டார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.