WATCH: 5 நிமிடங்களில் PCR பரிசோதனை முடிவுகளை வழங்கும் கையடக்கக் கருவி!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: 5 நிமிடங்களில் PCR பரிசோதனை முடிவுகளை வழங்கும் கையடக்கக் கருவி!!


சிங்கப்பூரில் கொரோனா சோதனையை மேற்கொள்ள ஒரு புதிய, துரிதமான கையடக்கக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.


Cell ID எனும் உள்ளூர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட குறித்த அந்தச் சோதனைக் கருவி கூடிய விரைவில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படலாம்.


கருவியின் மூலம் 5 நிமிடங்களில் கொரோனா தொற்றுக்கான சோதனை முடிவுகளைப் பெற முடியும்.


கருவி ஏற்கனவே தனிமைப்படுத்தும் இடத்திலும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியிலும் சோதிக்கப்பட்டுள்ளது. அடுத்து, சுகாதார அறிவியல் ஆணையம் அதனைப் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கவேண்டும்.


மேலும் பரிசோதனைக் கருவி, சிறியதாகவும் எடை குறைவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Biochip எனப்படும் இந்தச் சில்லுக்குள் 10 மைக்ரோலிட்டர் மாதிரியை மட்டும் செலுத்தினால் போதும். பிறகு கருவியை மடிக்கணினியில் செருகி, முடிவுகளைச் சற்று நேரத்தில் தெரிந்துகொள்ளலாம்.


$ads={2}


மேலும் தொற்று உறுதி செய்யப்பட்டால், 5 நிமிடங்களில் புலப்படும். கிருமி இல்லை என்பதை 1 மணிநேரத்திற்குள் கண்டறியலாம்.


Quiz PCR Biochip என்று அழைக்கப்படும் அந்தக் கருவி, வழக்கமாகப் பயன்படுத்தப்படும் கருவிகளைப்போலவே, 97இலிருந்து 100 விழுக்காடு வரை துல்லியமான முடிவுகளைக் கொடுக்கும்.


10இல் 9 கிருமித்தொற்றுச் சம்பவங்களை அதனால் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


WATCH HERE: https://www.channelnewsasia.com/news/singapore/singapore-firm-creates-portable-covid-19-test-that-can-produce-13670904


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.