பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளார்.
2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் லங்கா சதொஷவிற்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை – கிண்ணியா பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (15) காலை 6.30க்கு அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் அப்துல்லா மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.