இன்று (15) அக்குறணை நகரில் கவன் சீலை கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீம் அக்குறணை எதிர்கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் புஜாபிடிய பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் உற்பட பலர் கலந்துகொண்டனர்.
$ads={2}
இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு பூராகவும் பல இடங்களின் அனைத்து இனமக்களாலும் முஸ்லிம்களுக்கு அவர்களது அடிப்படை உரிமையை பெற்றுக்கொடுக்கக் கோரி கவன் சீலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.