வெளிநாட்டில் இருந்து நாடு திரும்புபவர்களுக்கு 06 புள்ளிகள் கொண்ட சுகாதார அமைச்சின் வழிகாட்டல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்புபவர்களுக்கு 06 புள்ளிகள் கொண்ட சுகாதார அமைச்சின் வழிகாட்டல்!


தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று நிலைமையில் இலங்கைக்குள் வெளிநாட்டில் இருந்து அழைத்துவரப்படுபவர்கள் பின்பற்ற வேண்டிய தனிமைப்படுத்தல் செயல்முறை குறித்து சுகாதார அமைச்சகம் 6 புள்ளிகள் கொண்ட வழிகாட்டுதலை ஒன்றை வெளியிட்டுள்ளது.


இந்த காலகட்டத்தில் இலங்கைக்கு திரும்பும் மக்களுக்கான தனிமைப்படுத்தல் தொடர்பாக சமீபத்தில் செய்யப்பட்ட திருத்தத்திற்கு ஏற்ப இவ் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.


$ads={2}


வெளிநாட்டிற்கு வருபவர்களுக்கு இதுவரை கட்டாயமாக்கப்பட 14 நாள் தனிமைப்படுத்தல்  நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 14 நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தும் செயல்முறையைப் பின்பற்றுவதில் இருந்து  விலக்கு அளிக்கப்படும் என சுகாதார அமைச்சகம் அறிவித்திருந்தது.


அதற்கமைய கீழ்காணும் ஆறு புள்ளிகள் கொண்ட வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டுள்ளது.


1. இலங்கைக்குள் பிரவேசித்தவுடன் விமான நிலையத்தில் பெறப்படும் PCR எதிர்மறையாக இருத்தல்.


2. தனிமைப்படுத்தும் அறையில் இருவருக்கு அதிகரிக்காமல் இருத்தல்.


3. தனிமையான, ஒதுக்கப்பட்ட குளியலறை மற்றும் கழிப்பறை இருத்தல்.


4. பிற தனிமைப்படுத்தலில் இருக்கும் நபர்களோடு சமூக இடைவெளியை பேணுதல்.


5. தனிமைப்படுத்தலின் 12-14 ஆவது நாட்களின் மேலுமொரு PCR பரிசோதனை மேற்கொண்டு எதிர்மறையாக இருத்தல்.


6. தனிமைப்படுத்தல் நிறைவடையும் 14 ஆவது நாளன்று மேற்பார்வை மேற்கொள்ளும் சுகாதார அதிகாரிகளின் திருப்திக்கு ஏற்ப வெளியேறல்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.