பண்டிகைக் காலம் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பண்டிகைக் காலம் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!

பண்டிகைக் காலங்களில் கொழும்பு நகரில் இருந்து பொதுமக்கள் வேறு மாகாணங்களுக்கு பயணிப்பதை தவிர்த்து செயற்படுமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு நகரில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் பண்டிகைக் காலங்களில் அபாயம் நிறைந்த பகுதிகளுக்கு பயணிப்பதை இயன்றளவு தவிர்த்து செயற்படுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

$ads={2}

மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவலானது கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்டளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் குறைந்தளவான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வேறு மாவட்டங்களுக்கு பிரவேசித்தமை காரணமாகவே நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பண்டிகைக் காலங்களில் வேறு மாகாணங்களுக்கு பயணிக்கும் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றி செயற்படுமாறும் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.