வாகன சாரதிகளுக்கு பொலிஸாரால் விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாகன சாரதிகளுக்கு பொலிஸாரால் விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை!

குடிபோதை மற்றும் அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளைக் கைது செய்ய, நேற்று இரவு (18) முதல் நாடு முழுவதும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போக்குவரத்துப் பிரிவு பொலிஸாரினால் மறு அறிவித்தல் வரை அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்துதல், குடிபோதையில் வாகனங்களை செலுத்துதல் மற்றும் கவனயீனமாக போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடுவோரை கைது செய்ய விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

இந்த நடவடிக்கையை ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி வரை முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.

$ads={2}

விபத்துக்கள் ஏற்படுவதைக் குறைத்தல், வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் என்பனவே இதன் பிரதான நோக்கமாகும். 

குடிபோதையில் வாகனங்களை செலுத்துவோரை அடையாளங் கண்டு கொள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தேவையான உபகரணங்கள் உள்ளன என்றார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.