கண்டி - அக்குறனையில் இரு கொரொனா மரணங்கள்; 224 தொற்று உறுதியானவர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி - அக்குறனையில் இரு கொரொனா மரணங்கள்; 224 தொற்று உறுதியானவர்கள்!

கண்டி - அக்குறனையில் மேலும் 5 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதன்படி, அக்குறணை - துணுவிலை வீதியில் ஒருவரும், தலகஹகந்தயில் 4 பேருமே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும், இதுவரை வெளியிடப்பட்ட PCR முடிவுகளின் படி அக்குறணை பிரதேசத்தில் இருந்து மொத்தமாக 224 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இது தவிர நூற்றுக்கும் மேட்பட்ட PCR முடிவுகள் இன்று (19) அல்லது திங்கள் அன்று வெளியாகவுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றினால் இரு மரணங்களும் அக்குரணையில் பதிவாகியுள்ளது.

தற்போது முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களான தெலும்புகஹவத்த மற்றும் புளுகோகதென்ன, இவ்விரு பிரதேசங்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்ட பிரதேசங்கள், இதில் எந்தவித மாற்றமும் இல்லை.

$ads={2}

இதற்கு மேலதிகமாக எந்த கிராம சேகவர் பிரிவுகளும் முடக்கப்படுவதற்கான தீர்மானங்கள் இன்னும் எடுக்கப்படவில்லை என அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் தெளிவு படுத்தினார்.

விஷேடமாக மத்திய மாகாண ஆளுனரின் தீவிர கண்காணிப்புடன், அக்குறணை சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புத் துறையின் நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் என மத்திய மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.