மேல் மாகாண பாடசாலைகள் திறக்கும் திகதி தொடர்பான அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேல் மாகாண பாடசாலைகள் திறக்கும் திகதி தொடர்பான அறிவித்தல்!

மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் 21 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த விடயம் குறித்து சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் விவாதித்ததாக தெரிவித்தார்.


$ads={2}

எனவே விவாதிக்கப்பட்ட அனைத்து விடயங்களும் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் இறுதி முடிவு திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர்ஜீ.எல்.பீரிஸ் கூறினார்.

இதேவேளை டிசம்பர் 23 ஆம் திகதி வரை காலி வலய கல்விக்குற்பட்ட பாடசாலைகளை மூட தென் மாகாண கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

அத்தோடு அரச பாடசாலைகளுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் மூன்றாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 2021 ஜனவரி 03 ஆம் திகதிவரை பாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 4 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.