கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான இயலுமை தொடர்பில் நிபுணர் குழு ஆராய்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான இயலுமை தொடர்பில் நிபுணர் குழு ஆராய்வு!

மாலைத்தீவு, சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகள் தற்போது கொரோனா தடுப்பூசி கொள்வனவு மற்றும் அவற்றை மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.


நான்கு தடுப்பூசிகள் தொடர்பாகக் கவனம் செலுத்தி இந்த நாட்டிற்கு உகந்த தடுப்பூசியைக் கொண்டுவரும் இயலுமையை ஆராய்ந்து பார்க்க இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே நேற்று (15) விசேட நிபுணர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.


தடுப்பூசிகள் குறித்து மேலதிக விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இராஜாங்க அமைச்சர் விசேட நிபுணர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


Pfizer and BioNTech தடுப்பூசியை அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ளதுடன், அதன் விலை 20 அமெரிக்க டொலராகும். அதனை 70 பாகை செல்சியஸ் மறை வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தி வைக்க வேண்டும்.


Sputnik v- ரஷ்யாவின் ஔடத நிறுவனமொன்றால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அது ரஷ்யாவில் மாத்திரமே பயன்படுத்தப்படுகிறது. அந்த தடுப்பூசி 10 அமெரிக்க டொலராகவுள்ளது.


$ads={2}

CoronaVac – சீனாவின் சினோவெக் (Sinovac) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அது மூன்றாம் கட்டப் பரிசோதனைகளில் உள்ளது. இது 14 முதல் 30 அமெரிக்க டொலர் பெறுமதியுடையது.


பிரித்தானியாவின் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் AstraZeneca நிறுவனத்தின் தயாரிப்பான தடுப்பூசியை பொதுவான குளிர்சாதனப் பெட்டியில் களஞ்சியப்படுத்தி வைக்க முடியும். அது சுமார் 4 அமெரிக்க டொலர்களாவுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.