குற்றச்செயல்களுக்கான அபராதத் தொகையில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குற்றச்செயல்களுக்கான அபராதத் தொகையில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி!

தண்டனை சட்டக்கோவையில் காணப்படும் அபராதத் தொகையில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


நீதி அமைச்சினால் இதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.


இந்த விடயம் தொடர்பில் நேற்று (15) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தௌிவுபடுத்தினார்.


குற்றச்செயல்களுக்கான அபராதத் தொகையை அறவிடுவதனூடாக மக்கள் குற்றங்களை செய்யாதிருக்கும் வண்ணம் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் கூறினார்.


$ads={2}

தற்போது அறவிடப்படும் அபராதத் தொகை குறித்து எவ்வித அச்சமும் இன்மையாலேயே மக்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.


இதனால் தண்டனை சட்டக்கோவையில் காணப்படும் அபராதத் தொகையில் திருத்தங்களை மேற்கொண்டு அதற்கான புதிய சட்டங்களை உருவாக்க அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.