இதுவரை நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள இடங்கள்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இதுவரை நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள இடங்கள்!!

 மொத்தமாக 10 பொலிஸ் பிரிவுகள், 49 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தற்போது நாடு முழுவதிலும் முடக்கப்பட்ட நிலையில் உள்ளதாக கோவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


$ads={2}


கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, அம்பாறை, மாத்தறை, காலி, இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுலிலுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் முகத்துவாரம், கிரேண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டேம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, மருதானை, தெமட்டகொடை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன.

கொழும்பின் வேகந்தை, வணாத்தமுல்லை, சலாமுல்ல, ஹுனுப்பிட்டி, 60 ஆவது தோட்டம், கோகிலா வீதி, பெர்குசன் வீதி தெற்கு மற்றும் மயூரா பிளேஸ் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தின் பேலியகொடைவத்தை, பேலியகொடை கங்கபட, மீகாவத்தை, வெலேகொட வடக்கு, ஹிரிபிட்டி தெற்கு சுதந்திர மாவத்தை, நைதுவ, துவேவத்தை, ரோஹண விகாரை மாவத்தை, வெடிகந்தை, வாரண ஆலய வீதி, கந்தொட்ட வீதி மற்றும் ஹிட்ரா மாவத்தை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தின் அடலுகம கிழக்கு, அடலுகம மேற்கு, எப்பிடமுல்லை, போகஹவத்தை, கொரவல, கல்கேமந்திய, பமுனுமுல்லை, வேகங்கல்ல மேற்கு, வேகங்கல்ல கிழக்கு, மரிக்கார் வீதி மற்றும் கொட்டாவத்தை ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலின் கீழுள்ளன.

கண்டி மாவட்டத்தின் புளுகஹதென்ன, தெலம்புபஹவத்தை, போகம்பறை, பூர்ணவத்தை மேற்கு கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு மாத்திரம் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மாத்தறையின் கல்பொக்க கிழக்கு, கல்பொக்க மேற்கு, அலுத்வீதி, கொஹுனுகமுவ, ஹெட்டி வீதி ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன.

காலி மாவட்டத்தின் மிலிந்துவ, கூங்கஹா, தலப்பிட்டி, தன்கஹகெதர கிழக்கு, தெதுகொட வடக்கு, தெதுகொட தெற்கு மற்றும் மகுளுவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


இதேபோன்று, இரத்தினபுரியின் கொடிகமுவ கிராம சேவகர் பிரிவு உள்ளூர் அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளது.
மொனராகலையின் அளுபொத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.