புரெவி புயலில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புரெவி புயலில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் கல்வயல், மட்டுவில் பகுதிகளில் கடந்த 02ஆம் திகதி இரவு புரெவி புயலால் கடும் மழை பொழிந்து கொண்டிருந்த வேளை 7 வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட கும்பலில் இரண்டு பேர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் மற்றும் அளவெட்டியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 7 தங்கப்பவுண் நகைகள், 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 3 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன.

வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளைப் பார்த்து கொள்ளையர்கள் ஐவர் இந்தக் கைவரிசையைக் காண்பித்திருந்தனர். இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் மூவர் மாத்திரம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

முகங்களை மறைத்தவாறு வீடுகளுக்குள் புகுந்த கொள்ளையர்கள் வயோதிபர்களை அச்சுறுத்தி தாலிக்கொடி உள்ளிட்ட 15 பவுண் தங்க நகைகளும், 2 லட்சம் ரூபாய் பணத்தினையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது சம்பவம் தொடர்பான விசாரணைகளில் சுன்னாகம் மற்றும் அளவெட்டியைச் சேர்ந்த சந்தேகநபர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கொள்ளையிட்ட நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

$ads={2}

இன்று வரையான விசாரணையில் கொள்ளையர்களிடமிருந்து 07 தங்கப் பவுண் நகைகளும், 30 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களின் உடமையிலிருந்து 02 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் இதன்போது கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட 03 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இருவரும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் முற்படுத்தப்பட்டுள்ளதுடன், சான்றுப்பொருட்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.