மக்கள் நெரிசலாக வாழும் பகுதிகளால் பெரும் ஆபத்து! -பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மக்கள் நெரிசலாக வாழும் பகுதிகளால் பெரும் ஆபத்து! -பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

மக்கள் நெரிசலாக வாழும் பகுதிகளால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கின்றது என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.


பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய இதனை தெரிவித்துள்ளார்.


PCR பரிசோதனைக்கு உட்படுத்திய நபர்கள் சோதனை முடிவுகள் வெளியாவதற்கு முன்னர் வெளியில் நடமாடுவதே இதற்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக நோயாளி என பின்னர் உறுதிப்படுத்தப்படக்கூடிய நபர் தொழில் நோக்கங்களிற்காகவும் வேறு நோக்கங்களுக்காகவும் பல பகுதிகளிற்கு செல்லும்போது நோய் தொற்று அதிகரிக்கும் ஆபத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இவ்வாறான நோயாளிகளை கண்டுபிடிப்பதில் பொதுசுகாதார பரிசோதகர்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர், அவர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முடியாமலுள்ளது என பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}


அதிகளவில் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளையும், கொரோனா தொற்று அதிகரிக்ககூடிய பகுதிகளையும் புதிதாக தனிமைப்படுத்தியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.


வத்தளை, பேலியகொடை போன்ற பகுதிகளில் தொழிற்சாலை ஊழியர்கள் வசிக்கும் விடுதிகளில் கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


மோதர, வனாத்தமுல்ல, கிரான்ட்பாஸ் போன்ற பகுதிகளில் பெருமளவு மக்கள் வாழும் தொடர்மாடிக் குடியிருப்புகளில் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.