நிலைமை மோசமடைந்தால் கட்டுப்பாடுகளை விதிக்க தயங்கப் போவதில்லை! -இராணுவத் தளபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நிலைமை மோசமடைந்தால் கட்டுப்பாடுகளை விதிக்க தயங்கப் போவதில்லை! -இராணுவத் தளபதி

கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைந்தால் எதிர்வரும் பண்டிகை நாட்களில் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு தயங்கப் போவதில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த தருணத்தில் ஊரடங்கையோ அல்லது தனிமைப்படுத்தலையோ முன்னெடுக்கும் எண்ணமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

$ads={2}

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளார்கள் மத்தியில் கருத்து வெளியிட்டுள்ள இராணுவத் தளபதி,

தற்போதைய கொரோனா நிலையை நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். தேவைப்பட்டால் பொதுமக்களை பாதுகாப்பதற்காக தனிமைப்படுத்தல் அல்லது ஊரடங்கு குறித்த பொருத்தமான முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் குறிப்பாக பண்டிகை காலத்தில் நாங்கள் ஊரடங்கினை அல்லது தனிமைப்படுத்தலை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ள இராணுவத் தளபதி பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.