கர்ப்பிணித் தாய்மாரிடம் இருந்து குழந்தைகளுக்கு கொரோனா பரவாது! ஆய்வின் பின் வெளியான தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கர்ப்பிணித் தாய்மாரிடம் இருந்து குழந்தைகளுக்கு கொரோனா பரவாது! ஆய்வின் பின் வெளியான தகவல்!


கொரோனா தொற்று ஏற்பட்ட தாய்மார்களுக்கு மற்றவர்களை காட்டிலும் குறைவாகவே நோய்களால் தாக்கப்படுவதாக சிங்கப்பூரில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், கொரோனா பாதித்த தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளிடம், கொரோனா வைரஸுக்கு எதிரான ஆண்டிபாடிக்கள் இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.


சிங்கப்பூரில் 16 பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த சிறிய ஆய்வில், கொரோனா தொற்று தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவுவதில்லை எனவும் தெரியவந்துள்ளது. கொரோனா பரவல் குறித்து இன்னும் முழுமையான புரிதல் ஏற்படவில்லை. எனவே, இன்னும் ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன.


$ads={2}


இந்நிலையில், தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா பரவுவதில்லை என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் சுவாசத் தொற்றுகள், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஏற்படும் என உலக சுகாதார மையம் கூறுகிறது.


எனினும், கர்ப்பிணி தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா தொற்று பரவுமா என்பது தெளிவாகவில்லை என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கர்ப்பிணி தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா பரவாது என இந்த ஆய்வு மூலம் உறுதியாகியுள்ளதாக சிங்கப்பூர் ஆய்வாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.


ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலான பெண்களுக்கு இலேசான தொற்று ஏற்பட்டிருந்தது. ஆனால், வயது முதிர்ந்த மற்றும் எடை அதிகமுள்ள பெண்களுக்கு கடுமையான தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பங்கேற்ற அனைத்து பெண்களும் குணமடைந்துவிட்டமை முக்கிய அம்சமாகும்.


மூலம் - https://www.capebretonpost.com/news/world/babies-born-to-covid-19-mothers-have-antibodies-singapore-study-finds-532513/


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.