அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தனது திட்டங்களை அறிவித்த நித்யானந்தா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தனது திட்டங்களை அறிவித்த நித்யானந்தா!


சர்ச்சைக்கு பேர்போன சாமியாரான நித்யானந்தா தனது கைலாசா நாட்டை விளம்பரப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். கைலாசாவுக்கு மூன்று நாட்கள் விசா வழங்குவதாக அண்மையில் அவர் அறிவித்திருந்தார்.


இந்நிலையில், இந்து மதம் உயிரோடு இருப்பதற்கு கைலாசா தேவை என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார். அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ள வீடியோவில், “யூதர்கள் தங்கள் மதத்தை பாதுகாப்பதற்காக தனி நாட்டை உருவாக்கிக்கொண்டனர். அதேபோல, எதிர்காலத்தில் இந்து மதத்தை பாதுகாக்க இந்துக்களுக்கு கைலாசா வேண்டும்.


$ads={2}


இந்து மதத்துக்கான விதை வங்கிதான் கைலாசா. இந்து மதத்தை உயிரோடு பாதுகாக்க நமக்கு ஒரு விதை வங்கி வேண்டும். வேதங்களையும், ஆகமங்களையும் அவமதிப்பது நிந்தனை என கருதும் ஒரு நாடு நமக்கு தேவை. அதன்பிறகு, வேதங்களையும், ஆகமங்களையும் அவமதிப்பது சட்டப்படி நிந்தனை என பன்னாட்டு நிறுவனங்களுடனும், ஃபேஸ்புக், யூட்யூப் போன்ற சமூக வலைதள நிறுவனங்களுடனும், மற்ற நிறுவனங்களுடனும் பேச முடியும்.


இந்து மத வேதங்கள் புனிதமானவை. அவற்றை அவமதிப்பது, அவதூறு செய்வது தவறு. இந்து மதம் ஏறக்குறைய ஐசியூவில் இருக்கிறது. அதற்கு உயிர் கொடுத்து நாம் காப்பாற்ற வேண்டும். உடனே எல்லா இந்துக்களும் கைலாசாவுக்கு வந்துவிடுங்கள் என்று நான் கூறவில்லை. நீங்கள் எங்கே இருந்தாலும், கைலாசா விரைவாக உருவாவதற்கு ஆதரவளித்தால் போதும்” என்று தெரிவித்துள்ளார்.


அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது ஒரு லட்சம் பேரை கைலாசாவில் தஞ்சமடைய வைக்க திட்டமிட்டு வருவதாக நிதியானந்தா தெரிவித்திருந்தார். 


மேலும், கைலாசாவுக்கு வர விரும்புவோருக்காக ஆஸ்திரேலியாவில் இருந்து தனி இலவச விமானங்கள் இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


-இந்திய ஊடகம்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.