தாயின் இறுதிச் சடங்குகளுக்காக சுகாதார உத்தரவை மீறி கொழும்பில் இருந்து கம்பளை வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தாயின் இறுதிச் சடங்குகளுக்காக சுகாதார உத்தரவை மீறி கொழும்பில் இருந்து கம்பளை வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி !

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டலன்ட்பேர்க் மேல் பிரிவில் 46 வயதுடைய பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் களனி பிரதேசத்தில் தொழில் புரிந்த இப்பெண்ணிடம் கடந்த 7 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளிவரும்வரை தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


$ads={2}

எனினும், சுகாதார அதிகாரிகளின் உத்தரவையும்மீறி இப்பெண் அங்கிருந்து ஊருக்கு வந்துள்ளார். தனது தாய் உயிரிழந்துவிட்டதால் இறுதிக்கிரியைகளில் பங்கேற்பதற்காக தனது கணவருடன் கடந்த 8 ஆம் திகதி வாடகை ஆட்டோவிலேயே வந்துள்ளார். அத்தோட்டத்தில் உள்ள பலரும் மரண வீட்டுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் 9 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான முடிவுகள் வந்தநிலையில் அப்பெண்ணுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த பெண்ணுடன் நேரடி தொடர்பில் இருந்த 6 குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மரண வீட்டுக்கு வந்துசென்றவர்களின் விபரமும் திரட்டப்பட்டுவருகின்றது.

தொற்றுக்குள்ளான அவர் பெனிதெனிய பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

ஸ்டலன்பேர்க் மேல் பிரிவுகளுக்கு செல்லும் பிரதான பாதை குன்று குழியுமாக காணப்படுவதால் கொரோன தொற்றாளர் இருக்கும் இடத்துக்கு வாகனத்தை கொண்டுசெல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுமார் 600 மீற்றர்வரை நடந்துவந்தே அன்புலன்ஸ் வண்டியில் ஏறியுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.