கொரோனாவை அடுத்து இலங்கையில் மற்றுமோர் தொற்று நோய் - 500 நபர்கள் வரை பாதிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனாவை அடுத்து இலங்கையில் மற்றுமோர் தொற்று நோய் - 500 நபர்கள் வரை பாதிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் மற்றுமொரு ஆபத்தான நோய் தொற்று பரவி வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அனுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, நாச்சாதுவ, தலாவ, தம்புத்தேகம, நொச்சியாகம மற்றும் இபலோகம ஆகிய பகுதிகளில் இந்த நோய் பரவியுள்ளது.

லீஷ்மேனியாசிஸ் என்னும் இந்த ஆபத்தான நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் 500 பேர் வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


$ads={2}

மனிதர்களை பாதிக்கும் தொற்று நோய்களில் லீஷ்மேனியாசிஸ் உலகில் ஒன்பதாவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லீஷ்மேனியாசிஸ் என்பது ஒரு ஒட்டுண்ணி நோயாகும். இந்த ஒட்டுண்ணி பொதுவாக சேற்றில் வாழும் ஈக்களில் வாழ்கிறது.

உலகில் 98 நாடுகளை சேர்ந்தவர்கள் இதுவரையிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நோய் தொற்று தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று இந்த மாதம் 15ஆம் திகதி 9 மணி முதல் 12.30 வரை அநுராதபுரம் விஜயபுர பகுதியில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-தமிழ்வின்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.