கொழும்பில் 12,000ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள் - நேற்று மட்டும் 357 தொற்றாளர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் 12,000ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள் - நேற்று மட்டும் 357 தொற்றாளர்கள்!

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 697 பேரில் 357 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி மட்டக்குளி பகுதியில் 128 பேர், பொரளை பகுதியில் 110 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


$ads={2}

அதன்படி கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 961 ஆக உயர்ந்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 219 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மஹர பகுதியில் 55 பேர் மற்றும் கட்டுநாயக்க பகுதியில் 54 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.