காத்தான்குடி பொலிஸ் அதிகாரியொருவர் கத்தியால் குத்தி கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காத்தான்குடி பொலிஸ் அதிகாரியொருவர் கத்தியால் குத்தி கொலை!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் .

இந்தச் சம்பவம் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலமுனை பகுதியில் நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்றது.


$ads={2}

இந்தச் சம்பவத்தில் 35 வயதான பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 21 வயதான இளைஞர் ஒருவர் அக்கரைப்பற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு பாலமுனையில் அமைந்துள்ள தனது உறவினர் ஒருவரின் காணி எல்லைப்பிரச்சினை தொடர்பாக சமாதானம் செய்ய சென்ற வேளை, குறித்த நபரின் உறவினர் ஒருவரே அவரை கொலை செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் இதன்போது இடம்பெற்ற வாக்குவாதம் ஒன்றில் கத்தியால் பொலிஸ் அதிகாரி குத்தப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.