வெளி நாடுகளிலிருந்து இலங்கை வருபவர்களுக்கான தனிமைபடுத்தல் செயல்முறையில் மாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளி நாடுகளிலிருந்து இலங்கை வருபவர்களுக்கான தனிமைபடுத்தல் செயல்முறையில் மாற்றம்!

வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை 28 முதல் 14 நாட்களாக இருந்தது. இதனை மேலும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் (NOCPC) தெரிவித்துள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை இன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிடுவார் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.


$ads={2}

புதிய முறையின் கீழ், வெளிநாட்டிலிருந்து வரும் ஒவ்வொரு இலங்கையரும் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும், அதன் முடிவில் பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தனிநபரின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளிலிருந்து அவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகவில்லை என உறுதி செய்யப்பட்டால், முன்பு நடைமுறையில் இருந்தபடி அவர் இன்னும் 14- நாட்களுக்கு வீட்டுத் தனிமைப்படுத்தலுக்குற்படுத்த தேவையில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் வாரங்களில் சுற்றுலா பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்க பல கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக NOCPC தலைவர் தெரிவித்தார்.

வெளிநாட்டிலிருந்து திரும்பும் தனிநபர்கள் விமான நிலையத்தில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்க விமான நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.