கொரோனவினால் பாதிக்கப்பட்ட உடல்களை அகற்றுவது தொடர்பான அரசாங்க சுற்றறிக்கைக்கு ஏற்ப கொரோனாவினால் பாதிக்கப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் நபரின் சடலத்தை தகனம் செய்யுமாறு காலி பொலிஸாருக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அறிவுறுத்தியுள்ளார்.
ஊடக அறிக்கையின்படி, முன்னதாக, காலி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கொரோனா பாதிக்கப்பட்டவரின் உடல்களை சுகாதார அதிகாரிகளால் மேலதிக ஆலோசனை வழங்கப்படும் வரை வைத்திருக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று சுகாதார சேவை இயக்குனர் இது தொடர்பில் அவரது மேலதிக அறிவுறுத்தல்களை நீதிமன்றத்திற்கு தெரிவித்த பின்னர், காலி பொலிஸாருக்கு அனுப்பிய உத்தியோகபூர்வ கடிதத்தில், உடலை தகனம் செய்ய உத்தரவிட்டார்.
$ads={2}
இந்த விவகாரம் தொடர்பாக நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு அவர் எழுதிய கடிதம் குறித்து அனைத்து மருத்துவமனை அதிகாரிகளுக்கும் அவர் தனி விளக்கம் அளித்தார்.
அதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் உரிமை கோரப்படாத உடல்களை சேமித்து வைப்பதற்காகவே நீதி அமைச்சரிடம் உத்தியோகபூர்வ கடிதம் மூலம் குளிர் கொள்கலன்களை வழங்குமாறு கோரியதாக வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
மேலும் தனது கடிதம் உத்தியோகபூர்வ சுற்றறிக்கை என பலரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறிய அவர், அது சடலங்களை சேமித்து வைக்க குளிர் கொள்கலன்களுக்கான கோரிக்கை கடிதம் மட்டுமே என்றார்.
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்வது தற்போது பின்பற்றப்படும் செயல்முறையாக இருப்பதால், இதற்கு பின்னரும் தகனம் செய்யப்படுவதால் எந்த விளைவும் இல்லை என்றும் வைத்தியர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்தார்.