அரசாங்கம் அனைத்து மதத்தலைவர்களுடனும் ஆலோசனை பெற்று தனது முடிவை எடுத்திருக்க வேண்டும்! -ரணில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசாங்கம் அனைத்து மதத்தலைவர்களுடனும் ஆலோசனை பெற்று தனது முடிவை எடுத்திருக்க வேண்டும்! -ரணில்


கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தொடர்பான உணர்பூர்வமான பிரச்சினை குறித்து நாட்டின் அனைத்து சமூகத்தினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே முடிவெடுக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை என்ன செய்வது என தீர்மானிப்பது மக்களின் உரிமை என குறிப்பிட்டுள்ள முன்னாள் பிரதமர் அனைத்து மதங்களையும் சேர்ந்த மதத்தலைவர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்ட பின்னரே அரசாங்கம் தனது முடிவை எடுத்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}


ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ஐக்கியதேசிய கட்சி எப்போதும் மத சமூகங்களிடையேயான ஒற்றுமையை ஊக்குவித்துள்ளது என தெரிவித்துள்ளதுடன் கட்சி பாதிக்கப்பட்ட மக்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.


மத நம்பிக்கைகளை பின்பற்றுவது இலங்கை மக்களின் அடிப்படை உரிமை என தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க சுகாதார அதிகாரிகளை பின்பற்றும் அதேவேளை அரசாங்கம் இந்த விவகாரத்திற்கு உடனடியாக உரிய தீர்வை காணவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக செயற்படக்கூடாது. இவ்வாறான விடயங்களை அரசியல் மயப்படுத்தக்கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.