கொரோனா வைரசினை ஒழிப்பதற்காக இலங்கையின் கேகாலை பகுதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவரான தம்மிக்க பண்டாரவினால் அறிமுகம் செய்யப்பட்ட கொரொனா தடுப்பு மருந்தை சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது.
அரசாங்க ஆய்வுத் திணைக்களத்தை மேற்கோள்காட்டி அரச ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
எனினும் என்ன காரணத்திற்காக இந்த மருந்து ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.
அதேவேளை உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மேலும் இரண்டு மருந்து வகைகள் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.